புஷ்பா 2 படத்துக்காக 300 கோடிக்கும் மேலாக சம்பளமாக பெறும் அல்லு அர்ஜுன்!

திங்கள், 27 நவம்பர் 2023 (11:28 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு இப்போதே 1000 கோடி ரூபாய் அளவுக்கு வியாபார எதிர்பார்ப்பு நிலவுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக சம்பளம் பெற்றுக்கொள்ளாத அல்லு அர்ஜுன் வரும் வருமானத்தில் 33 சதவீதம் என்ற ஒப்பந்தத்தை போட்டுள்ளாராம். அதனால் குறைந்தது 330 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு இந்த படத்தில் இருந்து சம்பளம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்