பிரபல நடிகையை மிரட்டியவர்கள் கைது …

சனி, 27 ஜூன் 2020 (20:42 IST)
தென்னிந்திய சினிமாவில் 10 வருடங்களாக நடித்து வருபவர் பூர்ணா. கடந்த எப்ரல் மாதம் நகைக்கடை உரிமையாளர் என அறிமுகம் செய்த ஒரு கும்பல் டிக்டாக் மாடல் ஒருவரை மணமகனாகக் காட்டி நடிகை பூர்ணாவின் பெற்றோரிடம் சம்பந்தம் பேசியுள்ளனர்.

பின்னர் அவர்களின் நடத்தையும் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி பூர்ணாவிடம் குடும்பம் அவர்களிடம் கேட்டபோது, ஒரு லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணா குடும்பத்தின கேரளாவில் உள்ள மராடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார்  நேற்று மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்