வெப் சீரிஸ் மூலமாக தமிழ் சினிமாவுக்குக் கம்பேக் கொடுக்கும் நஸ்ரியா!

சனி, 30 செப்டம்பர் 2023 (07:54 IST)
தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார்.  இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து பஹத் பாசிலோடு ‘ட்ரான்ஸ்’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். சமீபத்தில் நானியுடன் அவர் நடித்துள்ள ‘அடடே சுந்தரா’ படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் தமிழ் படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளாராம். இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் சூர்யா சுதா கொங்கரா இணையும் படத்திலும் நஸ்ரியா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்