பைனான்ஸ் பிரச்சனையால் நின்ற நயன்தாரா படம்! விக்னேஷ் சிவனின் ஐடியா!

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:42 IST)
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு பைனான்ஸ் பிரச்சனைகளால் நின்றுள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்று. இந்த படத்தை அவரது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனின்  ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்த படத்துக்காக நெற்றிக்கண் என்ற தலைப்பை கொடுத்ததற்காக நயன்தாரா கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த படம் இப்போது பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது படப்பிடிப்பு நடத்த முடியாமல் நிற்கிறதாம். அதற்காக தான் அடுத்ததாக இயக்க இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் தயாரிப்பாளரிடம் இருந்து பணம் வாங்கி எடுத்து முடிக்க உள்ளாராம் விக்கி.

இதைக்கேட்ட ரசிகர்கள் பலரும், நயன்தாராவிடம் இல்லாத பணமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்