பிரபாஸின் கல்கி படத்தில் இணையும் மிருனாள் தாக்கூர்?

vinoth

வியாழன், 8 பிப்ரவரி 2024 (14:13 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 3 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இதையடுத்து சமீபத்தில் 3 நாட்கள் ஷூட்டிங்கில் நடித்துள்ளார்.

இதன் மூலம் கல்கி படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார். இரண்டாம் பாகத்தில்தான் அவருக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் மீதமுள்ள காட்சிகளை இரண்டாம் பாக ஷூட்டிங்கின் போது நடிப்பார் என சொல்லப்படுகிறது. கல்கி முதல் பாகம் மே 9 ஆம் தேதி ரிலீஸ் அகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்