தனக்கு தானே RIP ட்விட் போட்ட மீரா மிதுன்... என்னதான் ஆச்சு உங்களுக்கு?

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (21:32 IST)
அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர். இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்தி மீரா மிதுன் பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு திட்டி தீர்த்தனர். ஆனாலும், அடங்காமல் தொடர்ந்து எதையாவது செய்து பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டரில் " தான் இறந்து விட்டதாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது RIP" என்று பதிவிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார். இதற்கு இணையவாசிகள் பலரும் ரொம்ப சந்தோசம் ஏழரை சனி ஒழிஞ்சுது போயி சேறு என்று நோஸ்கட் கொடுத்து கமெண்ட் அடித்து கலாய்த்து தள்ளியுள்ளனர்.

meera mitun passed away postmortem and investigation is started RIP

— Meera Mitun (@meera_mitun) September 11, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்