உங்களோட அதை என்மீது போர்த்தி சூடேற்றுங்கள் - முகம் சுளிக்க வைத்த மீரா மிதுன்!

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (09:34 IST)
அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர். இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்தி மீரா மிதுன் பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நிலையில் தற்ப்போது மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அரைகுறை ஆடையில் மல்லாக்க படுத்து கிடக்கும் போட்டோவை வெளியிட்டு " உங்களுடைய அன்பு தான் எனது போர்வை. இரவு குளிர்ச்சியடையும் போதெல்லாம் நான்  என்னை சூடேற்ற அதை இழுத்து போர்த்திக்கொள்கிறேன்"  என பதிவிட்டு இணையவாசிகளிடம் வாங்கிக்கட்டி வருகிறார்.

Your ♥️ is the blanket I pull over myself to keep me warm whenever the night gets cold ❄️ pic.twitter.com/zh1LxCHBkp

— Meera Mitun (@meera_mitun) August 23, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்