கதை கேட்க உட்காந்து, கடைசியில் கதை தயாரிக்க ரெடியான கீர்த்தி!!

புதன், 2 செப்டம்பர் 2020 (14:34 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
 
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்க கீர்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
அந்த வெப் தொடரின் கதையைக் கேட்டதும் கீர்த்திக்கு பிடித்துவிட்டதாம்.  அதனால், அதை அவரே தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம். ஆனால் இதில் அவர் நடிப்பாரா அல்லது தயாரிப்பு மட்டுமா என்பது தெரியவில்லை. எனினும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்