’காந்தாரா’ 3ஆம் பாகத்தின் அறிவிப்பு.. ஒரே நேரத்தில் 2 பாகங்களின் படப்பிடிப்பு..!

Siva

புதன், 13 மார்ச் 2024 (15:59 IST)
பிரபல கன்னட நடிகர் ரிசப் ஷெட்டி நடித்த காந்தாரா என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி 400 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட இருப்பதாகவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
முதல் பாகத்தை நடித்து தயாரித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி தான் இரண்டாம் மூன்றாம் பாகத்தையும் நடித்து தயாரித்து இயக்க இருப்பதாகவும் இந்த படம் முதல் பாகத்தை விட இரு மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
கன்னட திரைப்படமாக இருந்தாலும் பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் தமிழ் உள்பட ஐந்து முக்கிய மொழிகளில் இந்த படம் உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பான் இந்திய நடிகர்களும் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்