’தீபாவளி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வாழ்த்து சொன்ன கமல்!

வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:15 IST)
மற்ற மதங்களின் பண்டிகையின் போது அந்த பண்டிகையின் பெயரைச் சொல்லி வாழ்த்து கூறும் பகுத்தறிவாளர்கள் மற்றும் நாத்திகவாதிகள், ஹிந்துகளின் பண்டிகை வந்தால் மட்டும் பொதுவான வாழ்த்து சொல்லும் வழக்கத்தை கொண்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
 
இதில் ஒரு சிலர் வாழ்த்து சொல்ல மாட்டார்கள் என்பதும் ஒருசிலர் விடுமுறை நாள் வாழ்த்துக்கள் என்று கூறுவதும் உண்டு. இந்த நிலையில் கமலஹாசன் இன்று சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து குறித்த ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்
 
ஆனால் அந்த டுவீட்டில் அவர் தீபாவளி என்ற வார்த்தையை உபயோகிக்காமல் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருநாள் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். கமல்ஹாசன் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு:
 
பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்