நீ கூப்பிட்டால் ரோட்டுல போற நாய் கூட வராது - குடும்பத்தை கிழித்த காஜல்!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (13:53 IST)
சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் வீடியோ தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்து பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் காஜல் பசுபதி. நடன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது நடன கலைஞர் சாண்டிக்கும், காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதையடுத்து சாண்டி சில்வியா என்பவரை மறுமணம் செய்துகொண்டு லாலா என்ற பெண் குழந்தைக்கு அப்பவனார். இது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் காஜல் பசுபதி சாந்தனு மற்றும் கிகி விஜய இருவரும் " இந்தி தெரியாது போடா" என்ற இந்தி திணிப்பிற்கு எதிராக அணிந்திருந்ததை  டீ ஷர்ட் போன்று எனக்கும் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு இணையவாசி ஒருவர். " உனக்கு தமிழ் படிக்க தெரியுமா நாயே" என்று கமெண்ட் செய்தான். ஏன் கற்று கொடுக்க போறியா? என கேட்க மற்றொரு நபர் "இல்லடா.  எந்த  மொழில கூப்டா  வருவான்னு  தெரிஞ்சிக்க" என்று மோசமான பதிலளித்தார். இதை பார்த்து செம கடுப்பான காஜல்,


"உங்க வீட்டு தொழிலை நான் பண்றதில்ல மேன், வகை வகையா பொண்ணுங்கள படுக்க கூப்பிடத்தான். இந்தி படிக்க அவ்வளவு ஆர்வமா டா? 2 ரூபாய்க்கு போகுற நீயெல்லாம் கூப்பிட்டால் ரோட்டில் போகுற நாய் கூட வராது என்று தன்னை கிண்டலடித்தவனுக்கு  செவுளில் அறைந்தார் போல் பதிலடி கொடுத்தார்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்