படையப்பாவ விட சூப்பர் கதை இருக்கு… அவர் ஓகே சொன்னா ஷூட்டிங்தான் – இயக்குனர் தகவல்!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:27 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் விஜய்க்காக சூப்பரான ஒரு கதை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

90 களில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் என்றால் அது கே எஸ் ரவிக்குமார்தான். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கினார். ரஜினியை வைத்து அவர் இயக்கிய படையப்பா திரைப்படம் இன்று வரை இண்டஸ்ட்ரி ஹிட்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் விஜய் அடைந்து வரும் வளர்ச்சியை பற்றி பேசியுள்ளார். அதில் ‘விஜய்க்கு படையப்பாவை விட சூப்பரான கதை வைத்துள்ளேன். அவர் ஓகே சொன்னால் நாளைக்கே ஷூட்டுக்கு போகலாம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்