விஜய்யின் 'தளபதி 62' படத்தில் இணைந்த ரஜினி-கமல் பட எழுத்தாளர்

ஞாயிறு, 21 ஜனவரி 2018 (22:15 IST)
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் கூர்மையன வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் 'பாபநாசம்', ரஜினியின் '2.0' உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஜெயமோகன் நெல்லை-குமரி தமிழில் புலமை பெற்றவர் என்பதால் இந்த படம் நெல்லை-குமரி பின்னணியில் உருவாகவுள்ளதாகவும், குறிப்பாக இந்த படம் மீனவர் பிரச்சனை குறித்த படம் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்