பிக்பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த ஜெயம் ரவி: கமலிடம் என்ன பேசினார்?

ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (09:45 IST)
பிக்பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த ஜெயம் ரவி
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது என்பதும் மூன்றாவது வாரம் இறுதிப்போட்டி என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலம் கசிந்தது. அந்த செய்தி தற்போது இன்றைய முதல் புரமோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசனுடன் கலந்துகொண்ட ஜெயம் ரவி, பிளாஸ்மா டிவி மூலம் போட்டியாளர்களிடம் பேசுகிறார். அவர்கள் விளையாடும் விதம் குறித்து கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசிய ஜெயம் ரவி, அதன்பின் கமல்ஹாசனிடமும் பேசினார். கமல்ஹாசன் அவரிடம் ‘பிக்பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் பார்ப்பீர்களா? என்று கேட்டபோது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்ல நீங்கள் எது செஞ்சாலும் நான் தொடர்ந்து பார்ப்பேன். ஏனெனில் நான் உங்களுடைய வெறித்தனமான பக்தன் என்றும் ஜெயம் ரவி கூறுகிறார். பிக்பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவியின் திடீர் விசிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்