சிம்புவுக்கு நன்றி கூறிய ஹன்சிகா மோத்வானி !!!

சனி, 31 அக்டோபர் 2020 (15:46 IST)
ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் மஹா படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது.இந்நிலையில் சிம்புவுக்கு, நடிகை ஹன்சிகா நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் நின்றது.

அதையடுத்து இப்போது முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

மஹா திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் ஹன்சிகா மோத்வானி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் பெரும் பாதிப்பையும் இழப்புகளையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்துவாடுபவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.  இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.


தற்போது மஹா திரைப்படம் முழுமையாக முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் யு.ஆர்.ஜமீல், தயாரிப்பாளர்கள் மதியழகன், அப்துல் மாலிக் முகம்மது ஜீபையர் மற்றும் ராசிக் அஹ்மது எல்லோருக்கும் எனது நன்றிகள். இப்படம் கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் ஒரு பாத்திரத்தில நடித்துள்ள சிம்புவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.அவரது ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்