விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:17 IST)
இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய் 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கைப் பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இடையில் அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு நெருக்கமான படங்களாக உள்ளன. இயக்கம் மட்டுமில்லாமல் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி பேசியுள்ள அவர் ‘வான்மகள் எடுத்த இயக்குனர் கண்டிப்பாக மின்னலே எடுத்திருக்க மாட்டார். ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனர்தான் சிறந்தவர்’ எனக் கூறியுள்ளார். இப்போது அவர் சிம்புவை வைத்து மீண்டும் இரண்டு படங்களை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்