மது அருந்துபவர்களுக்கு…. இயக்குநர் சேரன் அறிவுரை !

சனி, 28 மார்ச் 2020 (13:33 IST)
கொரோனா பாதிப்பினால் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கின்றது. இந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

நமது நாட்டில் 21 நாட்களுக்கும் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் தங்களின் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டும் பேசியும் வருகின்றனர்.

இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த வீட்டுச்சிறையை பயன்படுத்தி விட்டுவிடலாம். உங்கள் உடல் நலம் பற்றி யோசிக்க, இருக்கும் வியாதிகளை பற்றி யோசித்து அதை மாற்றியமைத்துக்கொள்ள நிறைய அவகாசம் இயற்கை கொடுத்துள்ளது.. சுவரை வைத்து சித்திரம். நீங்கள்தான் சுவர். யோசிங்க ‘’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்