பிரபல இயக்குனர் மரணம்… மரணத்துக்கு முன்பே கிளம்பிய வதந்தியால் அதிர்ச்சி!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (10:59 IST)
பிரபல இயக்குனரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் நிஷிகாந்த் காமத். இவர் திரிஷ்யம் மற்றும் காக்க காக்க ஆகிய படங்களின் இந்தி ரீமேக்கை அங்கு இயக்கியவர். அதுமட்டுமில்லாமல் தமிழில் மாதவன் நடித்த எவனோ ஒருவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

ஆனால் அவர் உயிர் பிரிவதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன. ஆனால் அவரது நண்பரும் நடிகருமான மிலாப் ஜாவேரி அதை மறுத்துள்ளார். மருத்துவமனையில் நிஷிகாந்துடன் இருக்கும் நபரிடம் பேசியதாகவும், அவர் இன்னும் இறக்கவில்லை என்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்