கிரைம் திரில்லர் வெர்ப் சீரிஸில் நடிக்கும் பிரபல நடிகர்…

புதன், 15 ஜூலை 2020 (17:56 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து சரத்குமார் சமீப காலங்களாக  குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு வெப்சீரிஸில் கிரைம் திரில்லர் எபிசோட்டில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இனிமேல் சினிமா பட ஷூட்டிங் எப்போது நடக்குமென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திரையரங்குகளும் திறக்கப்படததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எனவே வெப்சீரிஸில் முன்னணி நடிக்க நடிகர்கள் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சைக்கோ திரில்லர் பட பாணியில் உருவாகும் இத்தொடர் அர்ச்சனா சரத் எழுதிய பேட்ர்ஸ் ஆப் பிரே என்ற நாவலை மையமாகக் கொண்டதாகவும், இதில் சரத்குமார் நடிக்க ராதியா சரத்குமாரின் ராடன் மீடியா ஒர்க்ஸ் இதை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்