வெளிநாட்டு சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘ஈஸ்வரன்’ டீம்!

திங்கள், 11 ஜனவரி 2021 (17:52 IST)
சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 400 திரையரங்குகளில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளிநாட்டில் ரிலீஸ் ஆவது குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வெளிநாட்டில் ஓடிடி மூலம் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒரு முன்னணி ஓடிடி நிறுவனத்தின் மூலம் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளிநாட்டில் மட்டும் வெளியாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ளவர்கள் ஓடிடி மூலம் இந்த படத்தை பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் உள்ள சிம்பு ரசிகர்கள் ரிலீஸ் தினத்தன்று ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை பார்த்து மகிழ்வார்கள் என்பதும் இந்த தகவல் அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்