மெட்டி ஒலி புகழ் திருமுருகனின் அடுத்த சீரியல் அப்டேட்.. எந்த தொலைக்காட்சியிலும் இல்லாமல் புதுமுயற்சி!

vinoth

புதன், 17 ஏப்ரல் 2024 (07:34 IST)
மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சன் டீவியில் ஓளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும். இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கேரக்டரில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

இதையடுத்து அவர் பரத், வடிவேலு, நாசர் மற்றும் சரண்யாவை வைத்தும் எம் மகன் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின்னர் பரத் நடிப்பில் முணியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் அவர் மீண்டும் சீரியல் பக்கமே திரும்பினார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நாதஸ்வரம்’ ’தேன்நிலவு’ ’குலதெய்வம்’ ’கல்யாண வீடு’ ஆகிய சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்து அவர் இயக்கும் சீரியல் எந்த சேனலிலும் ஒளிபரப்பாகாமல் நேரடியாக தன்னுடைய யுடியூப் சேனலிலேயே ரிலீஸாகும் என அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்