நம் மண்ணை சேர்ந்தவரை பெருமைப்படுத்தியவர்களுக்கு நன்றி: தனுஷ் டுவீட்

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (21:41 IST)
நமது மண்ணைச் சேர்ந்த திறமையான கலைஞர் ஒருவரை வெளியுலகத்திற்கு தெரிய வைத்ததற்கு நன்றி என தனுஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் 
 
தனுஷ் நடித்து முடித்துள்ள கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை மாரியம்மாள் என்ற கிராமிய பாடகி பாடியிருந்தார். இந்த பாடல் தற்போது மிகப் பெரிய ஹிட்டாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக வரும் நிலையில் பல ஊடகங்கள் அவரை போட்டி போட்டுக் கொண்டு பேட்டி எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நமது மண்ணைச் சேர்ந்த ஒரு திறமையான கலைஞரை அறிமுகம் செய்ய உதவிய இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சற்றுமுன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்