கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தாமதமாகும் டிமாண்டி காலணி 2!

vinoth

சனி, 27 ஏப்ரல் 2024 (08:43 IST)
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. அதிலும் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய கோப்ரா படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.

இதையடுத்து டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதிலும் அருள்நிதி நடிக்க, அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, தயாரிக்கிறார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் செய்யவேண்டிய காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாம். முதலில் இந்த காட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிக தொகை ஆகும் என சம்மந்தப்பட்ட நிறுவனம் சொல்லிவிட்டதாம். இதனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டிமாண்டி காலணி 2 ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்