பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி...ரசிகர்கள் அதிர்ச்சி

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (19:21 IST)
பாலிவுட் மூத்த நடிகர் ரந்தீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வராமல் தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் இன்று கொரொனா தொற்றால் பலியானார்.

பாலிவுட் உலகில்சமீப காலத்தில் சோனுசூட், நீல் நிதின் முகேஷ், மஷிஷ் மல்கோத்ரா, கத்ரினா கைப்,ரன்பீர் கபூர், அவரது காதலி ஆலியா பட் , அமிதாப், அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் ரந்தீர் கபூர் நேற்றிரவு மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைவில் அனுமதிப்பட்டார்.  இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர் கூறியதாவது: நேற்று இரவு சுவாசப் பிரச்சனை காரணமாக நடிகர் ரந்தீர் கபூர் இங்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்