எஸ் பி பியை கௌரவிக்கும் கலர்ஸ் தொலைக்காடிசி…. நாளை மதியம் 12 மணிக்கு!

சனி, 19 செப்டம்பர் 2020 (12:03 IST)
பாடகர் எஸ்பிபியை கௌரவிக்கும் விதமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நாளை மதியம் 12 மணிக்கு சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட்  5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தினமும் எஸ் பி பி உடல்நிலை பற்றி அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் அவர் இப்போது குணமாகி வருவதாகவும், அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் 16 மொழிகளில் 40000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவரை கௌரவிக்கும் பொருட்டு கலர்ஸ் தொலைக்காட்சி நாளை மதியம் 12 மணிக்கு ஆயிரம் நிலவே வா  என்ற பெயரில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்