ரஜினியை அடுத்து நானியும் டாட்டா காட்டிட்டாரா? – மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் சிபி சக்ரவர்த்தி!

vinoth

சனி, 24 பிப்ரவரி 2024 (08:24 IST)
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க விருப்பப்பட்டு, அதற்காக கதைக் கேட்டு வேலைகள் நடந்து வந்த நிலையில் , திடீரென அந்த கதையில் திருப்தி இல்லாத ரஜினி அந்த கதையை வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிபி சக்ரவர்த்தி அடுத்த என்ன படம் இயக்கப் போகிறார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு நடிகர் நானியிடம் ஒரு கதை சொல்லி அதற்கு சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்பொது அந்த படமும் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லையாம்.

இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இந்த படம் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்