நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கும் ஆச்சார்யா! சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட்டம்!

வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:48 IST)
நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ’ஆச்சார்யா’. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து த்ரிஷாவிலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தன்னுடைய கேரக்டரை கூறியபடி படமாக்கப்படவில்லை என்பதால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவுக்கு பதில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்று சிரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட வைரல் ஹிட்டாகி வருகிறது.  இந்நிலையில் கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்