பீட்சா படத்தின் நான்காவது பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர் சி வி குமார்!

புதன், 3 ஜனவரி 2024 (07:43 IST)
2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பாபி சிம்ஹா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீட்சா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பீட்சா 2 என்ற படத்தை தயாரித்தார் தயாரிப்பாளர் சி வி குமார். ஆனால் முதல் பாகத்துக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் பீட்சா என்ற வெற்றிப்படத்தின் பிராண்ட் பெயரை பயன்படுத்துவது மட்டுமே குறிக்கோளாக இருந்ததாக தெரிந்தது. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை.

சமீபத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பீட்சா 3 : தி மம்மி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கினார். அஷ்வின் கக்குமானு, காளி வெங்கட், ரவீனா தாஹா, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில் இப்போது பீட்ஸா திரைப்படத்தின் நான்காவது பாகத்தை தயாரிக்க உள்ளதாக சி வி குமார் அறிவித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூஸ் இயக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்