உன் மேல லவ்லாம் இல்ல... ஒரு வேல வந்துச்சுன்னா... கெத்தை விட்டு கொடுக்காத பாலா!

திங்கள், 16 நவம்பர் 2020 (12:15 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பாலா ஆரம்பத்தில் இருந்தே நிறைய நல்ல நல்ல கன்டென்ட் கொடுத்து வருகிறார். இடையில் ஷிவானியுடன் நெருக்கமாக பழகி இருவரும் சேர்ந்து புது ரூட்டில் கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர்.

இதை ஒரு காரணமாகவே கூறி பாலாவுக்கு காதல் கண்ண மறைக்குது என ஆரி அவரை நாமினேட் செய்தார். இதனை  கிண்டலடித்த பிக்பாஸ் ஒவ்வொருவரும் நாமினேட் செய்யப்பட்டதற்கான காரணத்தை கூறி கலாய்த்தார்.

இந்த சீசனில் நாம் ஒன்றை கவனித்தாகவேண்டும். பாலா பொண்ணுங்க பின்னாடி போகுற ஆள் இல்லை. ஆனால், அவர்களை தன் பின்னால் வரவைக்கும் நேக்கு கொண்டவர். நிறைய இடத்தில் நாம் இதை கவனித்திருப்போம். எப்போவும் ஷிவானி தான் பாலா பின்னாடி போவார். பாலா அவருக்கான கெத்தை விட்டு கொடுக்காமல் இருந்து வருகிறார்.

இந்த ப்ரோமோவிலும் அப்படிதான் ஷிவானியிடம் காதல் எல்லாம் ஒண்ணுமில்ல... உன் மேல் எனக்கு லவ் வராது.. ஒரு வேல வந்துச்சுன்னா சொல்றேன் என செம ஸ்மார்ட்டா கெத்தா சொல்லிட்டார்... இப்போவாவது புரிஞ்சுக்கோங்க பாலா எப்படிப்பட்ட ஆளுன்னு.. ஜகலால கில்லாடி போல.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்