அருண்விஜய்யின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு: குரூப் போட்டோ வைரல்

ஞாயிறு, 10 ஜனவரி 2021 (20:43 IST)
அருண்விஜய்யின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு
அருண் விஜய் நடிப்பில் ஈரம் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்நடித்த ’குற்றம் 23’ என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று கருதப்பட்ட நிலையில் அருண் விஜய்யின் 31 வது படத்தை இயக்க அறிவழகன் ஒப்பந்தமானார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் அருண்விஜய் மற்றும் அறிவழகன் தங்களது ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்த இந்த படம் திகில் கதையம்சம் கொண்டது என்றும் குற்றம் 23 படத்திற்கு இணையாக விறுவிறுப்பாக அனைத்து காட்சிகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்