அதுல்யாவும் அவரது நாய்குட்டியும்.... கொரோனா சமயத்தில் இப்படி ஒரு பதிவா?

வெள்ளி, 3 ஜூலை 2020 (09:32 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.  பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய  "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில்  சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் செல்ல நாய்க்குட்டியை சைக்கிளில் உட்காரவைத்து ரவுண்ட் அடித்த சூப்பர் கியூட் போட்டோவை வெளியிட்டு "இந்த ஜூலை மாதம் உங்கள் அனைவரையும் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் வழிநடத்தட்டும்" என பாசிட்டிவ் மோட் கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். அதற்கு இணையவாசிகள் " இந்த கொரோனா நேரத்தில் எப்படி மகிழ்ச்சியுடன்...?" என சோகத்துடன் ரிப்ளை செய்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

This July month may lead all my sweethearts with full of positivities , health and happiness ❤️ #newmonth #newbeginnings #newhope #newmindset

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்