பேயாக நடிக்கிறாரா ஆர்யா? சாக்லேட் பாய்க்கு இந்த நெலமையா?

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (11:22 IST)
நடிகர் ஆர்யா அரண்மனை 3 படத்தில் பேயாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் சுந்தர் சி வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக அவர் இயக்கிய ஆக்‌ஷன் படம் வெளியானது. அதையடுத்து சூட்டோடு சூடாக வட இந்தியாவில் அரண்மனை 3 படத்தை இயக்கி வந்தார். கொரோனாவால் இப்போது அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்த ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்