அனுபமாவின் 100 கோடி ரூபாய் வசூல் டில்லு ஸ்கொயர் இன்று முதல் ஓடிடியில்!

vinoth

வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:11 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் படத்தின் கதாநாயகன் சித்துவோடு படு ரொமாண்டிக்கான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான போஸ்டர் ஒன்றில் அனுபமாவின் கைகள் சித்துவின் இடுப்புக்கு கீழே இருப்பது போல இருந்தது. இதனால் இந்த படத்தின் மீது ஆபாசப் படம் என்ற முத்திரை விழுந்தது.

அதனால் படத்துக்கு இளைஞர்களின் ஆதரவு பெரியளவில் கிடைத்து 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்நிலையில் இன்று முதல் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த படத்துக்கு ஓடிடியிலும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என தெரிகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்