கவலை வேண்டாம் செல்லம்மா – அனிதாவுக்கு ஆதரவாக கணவர் பதிவு!

சனி, 31 அக்டோபர் 2020 (16:48 IST)
பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கும் அனிதா சம்பத்தின் கணவர் அவருக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனிதாவின் கணவர் தனது மனைவி குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவினை இட்டுள்ளார். அதில், " இன்றுடன் என் மனைவியை பிரிந்து 30 நாள் ஆகிறது. நாங்கள் காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் திருமணமாகியும் இத்தனை வருடங்களில் இவ்வளவு நாள் பிரிந்து இருந்ததே இல்லை என சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது கன்பெஷன் அறையில் அனிதா தனிமையாக உணர்வதாக அழுது புலம்பியதை அடுத்து ‘கவலை வேண்டாம் செல்லம்மா ‘ எனப் பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்