இயக்குனர்கள் என்னை அதற்கு தான் அழைக்கிறார்கள் - அக்ஷரா கௌடா வேதனை

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (15:12 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும் மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சினிமாவில் நடிப்பது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர்,  " ஆரம்பத்தில் கவர்ச்சி கதாபாத்திரம் என்றாலும் ஓகே என்று நடித்ததால் என்னவோ தெரியவில்லை. தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ்இது மாதிரியான ரோலுக்கு தான் இயக்குனர்கள் என்னை அணுகுகிறார்கள். ஆனால், தற்ப்போது கார்த்திக் ராஜு இயக்கத்தில் சூர்ப்பணகை படத்தில் எனக்கு ஒரு நல்ல அழுத்தமான ரோல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்