ஐஸ்வர்யா ராஜேஸின் த்ரில்லர் படம் “பூமிகா” – ஓடிடியில் வெளியிட முடிவு!

திங்கள், 19 அக்டோபர் 2020 (12:23 IST)
கொரோனா காரணமாக தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த த்ரில்லர் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பூமிகா”. பெண் மையப்படுத்தப்பட்ட இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த படம் சினிமா வாழ்க்கையில் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரையரங்குகள் கொரோனா காரணமாக திறக்கப்படாமல் உள்ளதால பெரிய படங்களே ஓடிடிக்கு வியாபாரமாகி வரும் நிலையில், “பூமிகா”வையும் ஓடிடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜீ5, அமேசான் ப்ரைம் போன்றவை பெருவாரியான தமிழ் படங்களை வாங்கி வரும் நிலையில் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் வாங்க முன் வந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்