நடிகை நிஹாரிகாவுக்கு திருமணம்: ஐஜி மகனை மணக்கிறார்

வெள்ளி, 19 ஜூன் 2020 (09:38 IST)
நடிகை நிஹாரிகாவுக்கு திருமணம்: ஐஜி மகனை மணக்கிறார்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் என்பவர் இயக்கிய திரைப்படம் ’ஒரு நல்ல நாள் பார்த்து கதை சொல்றேன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் அதில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் ’ஒரு நல்ல நாள் பார்த்து கதை சொல்றேன்’திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர்களில் ஒருவர் நடிகை நிஹாரிகா’ இவர் சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்ம ரெட்டி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகை நிஹாரிகாவுக்கும் குண்டூர் ஐஜி பிரபாகரன் ராவ் என்பவரின் மகன் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை நடிகை நிஹாரிகா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து சைதன்யாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நடிகை நிஹாரிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணத்திற்கு பின்னர் நடிகை நிஹாரிகா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நிச்சயம் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்