கிராம மக்களுக்கு உதவிய நடிகர் விஷால்...குவியும் பாராட்டுகள்

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (14:07 IST)
தமிழ் சினிமாவின்  முன்னணி  இயக்குனர் ஹரி. இவர்  தமிழ், சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஷாலுடன் அவர் இணைந்துள்ளார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.  கார்த்திக் சுப்பராஜ்-ன்  ஸ்டோன் பென்ச் இப்படத்தைத் தயாரிக்கிறது.

தூத்துக்குடியில்  இப்பட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளார். 

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள  நிலையில்,இப்பட ஷூட்டிற்ங்காக தூத்துக்குடி சென்ற  நடிகர் விஷாலிடம்,. எம். குமாரசக்கனாபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீர் வசதி ஏற்படுத்தித்  தர கோரிக்கை வைத்தனர்.

இதையேற்ற நடிகர் விஷால், உடவடியாக அந்த கிராமத்தில் போர் வசதியுடன்  2 டேங்குடன் அமைத்துக் கொடுத்துள்ளார்.

நடிகர் விஷாலின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்