சொந்த ஊரில் தெருத்தெருவாக கிருமி நாசினி தெளிக்கும் பிரபல நடிகர்...!

திங்கள், 30 மார்ச் 2020 (10:02 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க    அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.


ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பு கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளித்துள்ளார் நடிகர் விமல். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்