நடிகர் சிம்பு படத்தில் இணைந்த பிரபல நடிகர் ....ரசிகர்கள் மகிழ்ச்சி

சனி, 26 டிசம்பர் 2020 (15:37 IST)
மாநாடு படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறித்துள்ளார்.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.
 

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து வீசிய நிவர் புயலால் பாண்டிச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அங்கு நடந்து கொண்டிருந்த மாநாடு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஆனால் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சென்னை செல்லாமல் அங்கேயே தங்கி இருந்தனர். புயலுக்குப் பின் இயல்புநிலை திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இப்போது மாநாடு படத்தில் பாரதிராஜா விலகியுள்ள நிலையில், நடிகர் வாகை சந்திரசேகர் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில், விஜய்யின் அப்பா, எஸ்.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி  உள்ளிட்ட நட்சத்திர பட்டாளே நடித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்