டிவி தொகுப்பாளர் பலி - சோகத்தில் மனைவி மற்றும் மகன் தற்கொலை

ஞாயிறு, 3 ஜூன் 2018 (15:20 IST)
பிரபல டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பலியான சோகத்தில் அவரது மனைவி தனது மகனை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் சந்தன். இவருக்கு மீனா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.
 
சந்தன் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்த அவரது மனைவி மீனா தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சந்தன், அவரது மகன், மனைவி உயிரிழந்ததால் அவர்களது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்