உருகுலைக்கும் ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் "ஆலகாலம்"

J.Durai

வியாழன், 21 மார்ச் 2024 (14:35 IST)
ஆலகாலம் என்றால் கொடிய நஞ்சு ஆகும்,  வஞ்சகம்,சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது.
 
இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா  பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இலட்சியத்தோடு வளர்த் தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி,இவர்கள் வாழ்க்கையை சூறையாடும் வஞ்சகம்,சூழ்ச்சி  "ஆலகாலம்"
 
இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ? 

தாயின் லட்சியம், இளைஞனின் முயற்சி,காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா?என்பதே 'ஆலகாலம்" திரைப்படம் சொல்லும் கதையாகும்.
 
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும் தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார் இயக்குனர் ஜெயகிருஷ்ணா.
 
காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.  நாயகனாக,ஜெயகிருஷ்ணா, நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார்கள்.
 
இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.
 
காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது என   இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த "ஆலகாலம்" திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம்  சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்