போதைப்பொருள் விவகாரம் – பிரபாஸ் பட ஹீரோயின் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் !

புதன், 23 செப்டம்பர் 2020 (17:50 IST)
சுஷாந்த சிங் தற்கொலை விவகாரத்தில் போதைப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல முன்னணி நடிகர், நடிகைகள் பெயர் அடிப்படும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ஷ்ரதா கபூருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் “சிச்சோரே” என்ற படத்தில் நடித்தவர் ஷ்ரதா கபூர். சுஷாந்தின் விருந்தினர் இல்லத்தில் போதை பார்ட்டிகள் நடைபெற்றதாகவும், அதில் ஷ்ரதா கபூரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  பிரபாஸ் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளா தீபிகா படுகோனெ, ராகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் , ஷ்ரத்தா கபூர் ஆகிய நான்கு பேரும்  3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டுமென  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட்டில் நான்கு முன்னணி நடிகைகளுக்கு  சம்மன் அனுபிய  விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்