ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சனி, 20 மார்ச் 2021 (18:13 IST)
கொரோனா பரவிவருவதால் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
 

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.
.
இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வரும் ஜுலை மாதம் 23 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இதற்கான ஏறபாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் அலை கொரோனா பரவிவருவதால் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்