வீடு வாங்க ஆலோசனை கேட்ட ரிஷப் பண்ட்… கலாய்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

சனி, 30 ஜனவரி 2021 (09:50 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி நாடு திரும்பியுள்ளார்.

பயங்கரமான அவநம்பிக்கைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். இதையடுத்து இப்போது இந்தியா திரும்பி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததில் இருந்தே என் வீட்டில் உள்ளவர்கள் புதிதாக வீடு வாங்கும் நேரம் இது என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் வீடு வாங்க சிறந்த இடங்களை பரிந்துரையுங்கள்.’ எனக் கூறியிருந்தார். பண்ட்டின் இந்த டிவீட்டுக்கு பதிலளித்த முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் ‘ஏன் நீங்கள் ஒரு கிரிக்கெட் மைதானம் வாங்க கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்