என் மனைவிகளுக்கு நான் உண்மையாக இருந்தது இல்லை… கால்பந்தாட்ட ஜாம்பவான் ஒப்புதல்!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:23 IST)
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் என அழைக்கப்படும் பீலே தான் தன்னுடைய மனைவிகளுக்கு உண்மையாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகின் மூடிசூடா மன்னன் என்றால் அது பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலேதான். பிரேசிலுக்காக அவர் 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலகக் கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது 80 வயதாகும் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ளது.

அதில் பீலே ‘நான் என்னுடைய மூன்று மனைவிகளுக்கும் உண்மையாக இருந்தது இல்லை. எனக்கு பலருடன் ரகசியக் காதல் இருந்தது. அதன் மூலம் குழந்தைகளும் பிறந்தன. எனக்கு எத்தனைக் குழந்தைகள் என்று கூட எனக்குத் தெரியாது. இதையெல்லாம் நான் சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் சொல்கிறேன்’ எனக் கூறியுள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்