இனி இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்கமாட்டேன் – தோனியின் தீவிர ரசிகர் முடிவு!

புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:08 IST)
இந்திய முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றதை அடுத்து இனி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க மாட்டேன் என சிகாகோ சாச்சா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிகாகோ சாச்சா என்ற கிரிக்கெட் ரசிகர் உலகளவில் பிரபலம். அதற்குக் காரணம் அவர் பாகிஸ்தான் விளையாடும் எல்லா போட்டிகளையும் காண மைதானத்துக்கு வந்து பாகிஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அதுமட்டுமில்லாமல் அவர் பாகிஸ்தானியராக இருந்தாலும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மிகத்தீவிரமான விசிறி.

இந்நிலையில் இப்போது தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இனி இந்தியா பாகிஸ்தான் போட்டியை காணமாட்டேன் என அவர் அறிவித்துள்ளார். விரைவில் ராஞ்சி சென்று தோனியை சந்திப்பேன் என அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்