IPL -2020 சென்னை சிங்கங்களும் - மும்பை சிறுத்தைகளும் மோதிய முதல் போட்டி ’’உலக சாதனை’’ !

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:09 IST)
ஐபிஎல் -2020 கிரிக்கெட் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகள் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், பிசிசிஐ துணிச்சலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டு தொடரை நடத்துவதாக அறிவித்து ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது.

இறுதிப் போட்டி நடந்தால் எப்படி இருக்குமோ அந்தப் பரவசத்தை  சென்னை கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டியிலேயே அனல் பறந்தது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை மட்டும் டிவி, ஆன்லையின் சுமார் 20 கோடிப் பேர் பார்த்துள்ளனர். இது உலக வரலாற்றில் ஒரு புதிய சாதனை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

நேற்றி துபாயில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்