நூறு நாள் வேலைத்திட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்!

செவ்வாய், 28 ஜூலை 2020 (11:33 IST)
இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ராஜேந்திர சிங் தாமி.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாட விரும்பும் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வந்தார். ஆனால் கொரோனாவால் இப்போது அதுவும் தடைபட, குடும்ப வறுமையைப் போக்கும் விதமாக நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இது சம்மந்தமாக அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக நடிகர் சோனு சூட் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்