கோழிப் பண்ணை வைக்கிறாரா தோனி? கிரிக்கெட்டுக்கு பின்னர் செய்யப்போகும் தொழிலா?

திங்கள், 16 நவம்பர் 2020 (09:53 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தற்போது கோழிப்பண்ணை வைப்பதற்கான முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமத்தில் இருக்கிறார். இதையடுத்து அவர் ஓய்வுக்குப் பின்னர் பல்வேறு தொழில்களை செய்ய ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் பாலிவுட்டில் படத் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது அவர் கோழிப் பண்ணை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய கோழிப் பண்ணை ஒன்றில் அவர் 2000 கோழிகளை ஆர்டர் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அவர் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்